இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களைக் கருத்திற் கொண்டு விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையில் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதிர்பார்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், “இம்முறை மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைத் திருத்தத்தில் நுகர்வோர் அதிக நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர், மயூர நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.