வெட்டிப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டின் உரிமையாளரும் நண்பரும் வெட்டிப் படுகொலை!

Share

அநுராதபுரம் மாவட்டம், எப்பாவல – எந்கல சந்தியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைக் கைதுசெய்ய பொலிஸ் சார்பில் சில குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு வீட்டின் உரிமையாளரும் அவரது நண்பரும் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த சிலர் கூரிய ஆயுதங்களால் அவர்களைத் தாக்கினர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பலியானவர்கள் 46 மற்றும் 31 வயதுகளையுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மது பாவனை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...