WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஊழல், மோசடிகளை வெளிப்படுத்தும் ஊடக சந்திப்பு

Share

நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பெரும் எண்ணிக்கையான கோப்புகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.

அது தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பி. இன்று வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க, அரசியல்பீட உறுப்பினர்கள், முன்னாள் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் வசந்த சமரசிங்க மற்றும் சட்டத்தரணிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜே.வி.பி. தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் ‘நாட்டை அழித்த திருடர்கள் மொத்தமாக அம்பலம்’ என்ற தலைப்பின் கீழ் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.

இதன்படி, நாட்டின் பொதுச்சொத்துக்களை பாரியளவில் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பல மோசடிகள், ஊழல்கள் இன்று ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...