20220601 095248 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பொது நூலகம் எரிப்பின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Share

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தை உருவாக்குவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், பிரதி மேயர் து.ஈசன், யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ். பொது நூலக பிரதம நூலகர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகம்1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி தென்னிலங்கையிலிருந்து வந்த வன்முறைக் குழுவொன்றால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் அது திகழ்ந்தது.

VideoCapture 20220601 103051 1

VideoCapture 20220601 103055 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...