ஸ்ரீபால டி சில்வா
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ் – இந்தியா படகுச் சேவை விரைவில்

Share

புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை (கேகேஎஸ்) துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஒரு வழிப் பயணத்துக்காக பயணி ஒருவரிடம் இருந்து 50 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடப்படும் என்றும் 100 கிலோ கிராம் நிறையுடைய பொதி அனுமதிக்கப்படும் என்றும் படகு சேவை பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சருக்கும் புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுக்கும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு துறைமுகங்களுக்கும் இடையிலான பயண நேரம் 4 மணி நேரம் என்றும் ஒரு படகில் 150 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் பகல் நேரத்தில் மட்டும் நேவையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...