Santha Pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு நலன் கருதியே அரசை ஆதரித்தேன்! – கூறுகிறார் சாந்த பண்டார

Share

நாட்டு நலன் கருதியும், மனசாட்சியின் பிரகாரமுமே அரசை ஆதரிக்கும் முடிவை எடுத்தேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

அரசுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சு பதவியை நேற்று பெற்றுக்கொண்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

” இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சி தோல்வி கண்டது. எனவே ,நாட்டை வங்குரோத்து அடையவிடமுடியாது. ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பிரகாரம்தான் இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்றேன். விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளது. மனசாட்சிக்கு கட்டுப்பட்டே இந்த முடிவை எடுத்தேன் . ” – என்று கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...