mahinda e1649687958337
அரசியல்இலங்கைசெய்திகள்

நானே பிரதமர்! – தேசிய அரசு குறித்த தகவல் வதந்தி என்கிறார் மஹிந்த

Share

“தேசிய அரசு தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி. பிரதமர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் எனக்கு இல்லை. பதவிக் காலம் முடிவும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன்.”- இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு தேசிய அரசு நிறுவப்படும் எனவும், அந்த அரசின் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படும் எனவும் பரவலாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச,

“நாட்டில் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசு செயற்பட்டு வருகின்றது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கின்றது. உடனே ஓய்வுபெற மாட்டேன். தேசிய அரசு தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.

தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசு விரைவில் தீர்க்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...