ஹஜ் யாத்திரிகர்களை
இலங்கைசெய்திகள்

இம்முறை ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பாமல் இருக்கத் தீர்மானம்!

Share

இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து யாத்திரிகர்களை மக்காவுக்கு அனுப்பாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாத்திரிகர்களை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என அமைச்சில் நடைபெற்ற பேச்சின்போது பிரதான முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இம்முறை யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் நேற்று சவூதி அரசுக்கு அறிவிக்கப்பட்டது எனத் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...