Gulab stormdd scaled
இலங்கைசெய்திகள்

வங்கக்கடலில் உருவாகிறது குலாப் புயல்

Share

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து நாளை வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை மற்றும் விசாகப்பட்டினம், கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு சாத்தியம் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 75–85 கிலோமீற்றரில் இருந்து 95 கிலோமீற்றர் வரை இருக்கும் என எதிர்வுகூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....