1649252242650 1
அரசியல்இலங்கைசெய்திகள்

முதலில் மக்களின் விருப்பதைப் பெறுங்கள்!

Share

நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். அதனை விடுத்து கமல் குணர்தவனவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படுமென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட வரி திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் கிழித்தெறிந்ததோடு, வரியை அறவிடுவதற்குப் பதிலாக நாணயத்தாள்களை அச்சிட்டு செலவு செய்து பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கொண்டது எனவும் தெரிவித்தார்.

எனினும், தற்போது மீள வரிகளை அதிகளவில் அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படியென்றால் எதற்காக ஆட்சிக்கு வந்ததும் வரிகளை குறைக்க வேண்டும் எனவும் ஹர்ஷ கேள்வி எழுப்பினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...