24 66160600e4154
இலங்கைசெய்திகள்

டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் தலைவரின் உதவியாளர் கைது

Share

டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் தலைவரின் உதவியாளர் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கைக்குண்டு ஆகியவற்றுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி, கங்காமொல வீதி, மட்டக்குளிய ஆனையிறவுத் தோட்டம், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
ஜெயலத் பண்டார திஸாநாயக்க
இலங்கை

ஜெயலத் பண்டார திஸாநாயக்கவுக்கு பயணத்தடை.

நிதி மோசடி ஒன்றின் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார...

kites
இலங்கை

பட்டம் பறந்ததால் விமானம் பறக்கவில்லை.

இன்றைய தினம், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம்...

sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...