இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் சுங்க வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட 12 மடிக்கணினிகள் மற்றும் 55 மதுபான போத்தல்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்பிரிவு அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கைக்கு வந்த இரண்டு விமானப் பயணிகளின் பயணப்பொதிகள் சோதனையின் போது, பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர்கள் இருவர் குறித்த பொருட்களை கொண்டு வந்துள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.