imf
இலங்கைசெய்திகள்

IMF இடமிருந்து டிசம்பரில் நிதி!!

Share

வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு இடம்பெற்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவழங்கல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடன் வழங்கும் காலத்திட்டம் உடன்படிக்கைக்கு அமைய தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிதியம் தொடர்பான அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கைக்கான நிதிகளை பெற முடியும்.

வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நிதி தொடர்பாக உறுதிப்படுத்தி எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதக் காலப்பகுதியினுள் சகல விடயங்களிலும் அவர்களது ஒத்துழைப்பு இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்குமாயின் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கான நிதி வழங்கல் ஆரம்பமாகும்.

வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடன் உத்தியோகப்பூர்வமான தொடர்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்துக்கு பின்னரே வெளிநாட்டு கடனளிப்பாளர்களை தொடர்பு கொள்ள முடியும் என மேலும் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கடனளிப்பாளர்களுடனான உத்தியோகப்பூர்வ கலந்துரையாடலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...