School Reopen
இலங்கைசெய்திகள்

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் காய்ச்சல்!!

Share

சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி தீபால் பெரேரா,

“இன்றைய நாட்களில், நம் குழந்தைகளுக்கு பல விதமான காய்ச்சல் நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ,இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் காணப்படும் நோயாளிகள் மற்றும் டெங்கு இன்னும் நமது சுற்றுச்சூழலில் உள்ளது. குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா நோய்க்கான அறிகுறிகளாக, காய்ச்சலுடன் இருமல், சளி சிலருக்கு வாந்தியும் ஏற்படுகிறது.

எனவே அந்த அறிகுறிகள் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற வைரஸ்களால் ஏற்படலாம், எனவே அந்த அறிகுறிகளைக் கொண்டவர்கள் முடிந்தால் வீட்டிலேயே இருக்குமாறு குறிப்பாகக் கூறப்படுகிறார்கள். அந்த குழந்தைகளை ஓய்வு, திரவ உணவு, ஒரு டோஸ் பாராசிட்டமால் கொடுத்து வீட்டில் வைத்திருந்தால் நல்லது.

அவசர நேரத்தில் வெளியே சென்றால் முகக்கவசம் அணியுங்கள். வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிவது நல்லது. ஏனெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்படலாம். குறிப்பாக ஆரம்ப பாடசாலை, டே கேர் சென்டர்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை வீட்டிலேயே வைத்திருப்பது நல்லது.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அது டெங்குவாக இருக்கலாம். உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், முழு இரத்த பரிசோதனையை செய்யுங்கள். டெங்கு இருந்தால், ரத்தத் தட்டுக்கள் குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...