namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக ஆட்சி மாற்றமே வேண்டும்! – சபையில் நாமல் வலியுறுத்து

Share

” ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றமே இடம்பெற வேண்டும். இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது. எனவே, அதற்கு அப்பால் செல்வது தவறான முன்னுதாரணமாக அமையும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” இலங்கை வரலாற்றில் ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றமே இதுவரை இடம்பெற்றுள்ளது. இப்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்த போராட்டங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளும் உள்ளன.

கோ ஹோம் கோட்டா என சிலர் கோஷம் எழுப்புகின்றனர். அவர் வீட்டுக்கு சென்றாலும் இப்பிரச்சினை தீராது. நாளை வணிகர்களை விராட்டுவார்கள், ஊரில் உள்ள கிராம சேவகர்களை விரட்டுவார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களையும் விரட்டுவார்கள். எனவே, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது.

நாடாளுமன்றத்தில் என்னை விட அரசியல் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். நாம் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழிகளை தேட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....