721187541parliamnet5
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதி சபாநாயகர் பதவிக்கும் போட்டி??

Share

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்முனை போட்டி நிலவக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த 22 ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது முதல் தேர்வாக, பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும்.

ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டால் ஏகமனதாக தெரிவு இடம்பெறும். இருவர் போட்டியிட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன்படி ஆளுங்கட்சியின் சார்பில் டிலான் பெரேராவும், 11 கட்சிகளின் சார்பில் அநுர பிரியதர்சன யாப்பாவும் பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிடக்கூடும். மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் உறுப்பினர் ஒருவரை நிறுத்தக்கூடும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...