721187541parliamnet5
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதி சபாநாயகர் பதவிக்கும் போட்டி??

Share

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்முனை போட்டி நிலவக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த 22 ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது முதல் தேர்வாக, பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும்.

ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டால் ஏகமனதாக தெரிவு இடம்பெறும். இருவர் போட்டியிட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன்படி ஆளுங்கட்சியின் சார்பில் டிலான் பெரேராவும், 11 கட்சிகளின் சார்பில் அநுர பிரியதர்சன யாப்பாவும் பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிடக்கூடும். மறுபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் உறுப்பினர் ஒருவரை நிறுத்தக்கூடும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...