ranil wickremesinghe
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை வழமைக்கு கொண்டுவர முடியும்!

Share

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை மீண்டும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படும் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டில் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சில விடயங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வாறான சீர்திருத்தங்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் தொடர்பில்,

* 2025 க்குள் முதன்மை பற்றாக்குறையை 2.3 ஆக்குதல்.

* 2026 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக அரசாங்க வருவாயை அதிகரிப்பது.

* துறை சார்ந்த வரிச் சலுகைகள் இல்லாமல் வருமான வரி விகிதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* VAT வரியை 8% – 15% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* VAT க்கு வழங்கப்பட்ட விலக்கு வரியை படிப்படியாக குறைத்தல், VAT திரும்பப்பெறுதலை விரைவுபடுத்துதல், SVAT முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்.

* 2025 ஆம் ஆண்டில், சொத்து வரி முறையை குறைந்தபட்ச வரி விலக்குடன் ஒரு செல்வ வரி மாற்றும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...