அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்டார்.
பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசு அமைவதற்கு வழிவிட்டே பதவி விலகவுள்ளனர்.
தம்மிக்க பெரேரா, பந்துல உட்பட 5 அமைச்சர்கள் ஏற்கனவே பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment