அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சுப் பதவியை ஏற்குக! – ராஜித வுக்கு அழைப்பு

Rajitha Senaratne.jpg
Share

சர்வக்கட்சி அரசில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நிராகித்துள்ளார்.

அவருக்கு சுகாதார அமைச்சு பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சகூட பிரதமரிடம், இணக்கம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ராஜிதவுக்கும் தூதனுப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை, இது சாத்தியப்படாது எனவும், இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை தான் மதிப்பதாகவும் ராஜித சேனாரத்தன, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும், இம்முறை ராஜித சேனாரத்ன கடும் தொனியிலேயே கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

“ ஒழுக்காற்று நடவடிக்கை என்பது நகைச்சுவையாக மாறியுள்ளது. டயானா கமகேவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவர் பிரிட்டன் பிரஜை. இதை நிரூபித்தால் எம்.பி. பதவியைக்கூட பறித்துவிடலாம். ஆனால் இதனை கட்சி செய்யவில்லை. அதனால்தான் டயானா கமகே , எல்லா விடயங்களிலும் கட்சியை விமர்சித்துவருகின்றார். ஹரின், மனுச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், டயானா விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என ராஜித இடித்துரைத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...