49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Share

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் மீளவும் உறுதிபடத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட்டார்.

முறையான புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும். அதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் மற்றும் வரைவு வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன.

புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைவு பற்றிய ‘கருத்துரு ஆவணம்’ (Concept Paper) மிக விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

 

 

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...