Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

Share

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக நிராகரித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, அரசாங்கம் முறையான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான இலக்குகளையும் பின்பற்றி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், முந்தைய அரசாங்கங்களின் கீழ் திறைசேரி கணக்கு நீண்டகாலமாக மேலதிக பற்று (Overdraft) நிலையிலேயே காணப்பட்டதாக ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.

அதன்படி, 2018ஆம் ஆண்டு 180 பில்லியன் ரூபாவும், 2019ஆம் ஆண்டு 244 பில்லியன் ரூபாவும், 2020ஆம் ஆண்டு 575 பில்லியன் ரூபாவும், 2021ஆம் ஆண்டு 821 பில்லியன் ரூபாவும் மேலதிக பற்று காணப்பட்டதாக இவர் தெரிவித்தார்.

ஆனால், எமது அரசாங்கத்தின் கீழ் 2025 நவம்பர் மாத அளவில், திறைசேரி கணக்கானது 1,202 பில்லியன் ரூபா நேர்மறையான மிகுதியைக் காட்டியுள்ளது.

இது முன்னைய நிலமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 ட்ரில்லியன் ரூபா முன்னேற்றமாகும் என அவர் தெரிவித்தார்.

அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்காக முன்வைக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டிற்கு, அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...