துப்பாக்கிச்சூடு 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

களுத்துறையில் இன்று இருவர் சுட்டுப் படுகொலை!

Share

தெற்கில் அண்மைய நாட்களாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்று களுத்துறை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

42 வயதுடைய நபரே இதன்போது பலியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்படவில்லை.

பாணந்துறை – நிர்மலா மாவத்தையில் வைத்து ஒருவர் இன்று முற்பகல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்தும் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...