202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுற்றிவளைப்பு நடவடிக்கை – 35 பேர் கைது

Share

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (15) நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் இன்று (16) அதிகாலை 1.00 மணி வரை சுமார் 30 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இரண்டு மணிநேரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நடவடிக்கையில் கஞ்சா விற்பனையாளர்கள், பாவனையாளர்கள், திருடர்கள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் 18 பேர் சிக்கியதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த இரண்டு மணித்தியாலங்களுக்குள்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 நபர்களையும் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றில் ஆஜராகாத 7 சந்தேக நபர்களையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...

Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...

manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...