மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், நேற்றைய தினம் முதல் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,இது தொடர்பான மேலதிக விபரங்களினை 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவும் +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய WhatsApp இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.