image 961255b90b
இலங்கைசெய்திகள்

வட்டமேசை மாநாடு – இலங்கையும் பங்கேற்கிறது

Share

சீனா, இந்தியா, சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகளின் பங்குபற்றுதலுடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கடன் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய ஜி20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி 20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படவுள்ளதுடன், ஜி20 நிதி அதிகாரிகள் எதிர்வரும் 23 முதல் 25 ஆம் திகதி வரை வட்டமேசையின் நேரடி கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

வட்டமேசையில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் துறை பங்கேற்பாளர்களின் பாரிஸ் கிளப் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

பாரம்பரிய கடனாளிகள் முதல் பணக்கார பொருளாதாரங்களில் புதிய கடன் வழங்குபவர்கள் வரை, அத்துடன் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகள் மற்றும் தனியார் துறையை ஒன்றிணைப்பதே வட்டமேசை மாநாட்டின் நோக்கம் என்று நாணய நிதியம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 8
செய்திகள்உலகம்

எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டுடன் போர்ச் சூழலை எதிர்கொள்ளும் தென்கொரியா: வரலாற்றுத் தீர்மானம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள...

16 8
இலங்கைஅரசியல்செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணை ஆரம்பம்!

கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது ‘சதொச’ நிறுவனம் ஊடாக முறையற்ற வகையில் பலகைகளை இறக்குமதி...

15 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு: இலங்கையின் பொருளாதாரத் தயார்நிலை குறித்து ஆளுநர் விளக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

14 8
செய்திகள்உலகம்

வடக்கு சைப்பிரஸில் துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச்சூழல் காரணமாக, பிராந்தியப்...