Tilvin Silva 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவை பாதுகாக்க ரணில் முயற்சி! – ஜேவிபி குற்றச்சாட்டு

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனினும், அவரை பாதுகாப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல. ஜனாதிபதி பதவி விலகியே ஆக வேண்டும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் செல்வா வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியை கொள்ளையடித்தார் என்றுதான் ஜனாதிபதி தேர்தலின்போது பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அப்படியான ஒருவரை ஜனாதிபதி நம்புவது எந்த அடிப்படையில்? எனவே , ராஜபக்சக்கள் ரணில் ஊடாக தமது பலத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். எனவே, மக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி பதவி விலகியே ஆகவேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...