sathiyamoorthy
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை

Share

யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை

யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதற்கு போதிய வசதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் சடலங்களை எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனாவில் 17 சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றது. கோம்பையன் மயானத்தில் மின்தகனம் செய்யும் வசதிகள் காணப்படினும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 17 சடலங்களில் 4 சடலங்களை அநுராதபுரத்தில் மின்தகனம் செய்வதற்கு ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது. ஆனால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போதைய ஊரடங்கு காலத்தில் அநுராதபுரம் செல்வது தொடர்பில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல்நிலை ஏற்படாத வண்ணம் அநுராதபுரத்தில் எரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...