an555
இலங்கைசெய்திகள்

தேரேறி காட்சிகொடுத்தார் நல்லூர் முருகன்

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாகக் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட திருவிழாவில் தேர் உற்சவம் நடைபெற்றுள்ளது.

ஆலய விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று உள்வீதியில் அந்தணர்களின் வேதங்கள் ஒலிக்க சிறிய ரக ரதத்தில் முருகப் பெருமான் உள்பிரகாரத்தில் காலை 7 மணிக்கு வலம் வந்தார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலையில் நல்லூர் உற்சவத்தை தரிசிக்க அடியவர்கள் வருவதைத் தடுக்க ஆலய வெளிவளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பக்தர்கள் இணையவழியில் முருகப் பெருமனை தரிசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

an555 78768

NALLUR 5

nallur 56767879

nauu6766

nallur 56767

NALLUR 4534

NALLUR

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...