gotabaya rajapaksa with mahinda rajapaksa 2
அரசியல்இலங்கைசெய்திகள்

‘113 இல்லையேல் நாளையே பதவி விலகுவேன்’ – மஹிந்த அதிரடி அறிவிப்பு

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது.

113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பஸில் தரப்பு கருதினாலும், மேற்படி பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள்வரைகூட கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது.

நாளைய தினமும் கையொப்பம் திரட்டப்படவுள்ளது. மேற்படி பிரேரணையில் 113 உறுப்பினர்கள் கையொப்பம் இடாவிட்டால், அடுத்த நொடியே தான் பதவி விலகுவார் என ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தற்போது 103 ஆசனங்கள் வரையே காணப்படுகின்றன. எனவே, பதவி துறக்கும் அறிவிப்பை மஹிந்த விடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

மகாநாயக்க தேரர்கள் சங்க பிரகடனத்தை வெளியிட்டுவிட்டால், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, அந்த அறிவிப்புக்கு முன்னர் மஹிந்த விலகக்கூடும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...