coal mining banner
இலங்கைசெய்திகள்

நுரைச்சோலைக்கு நிலக்கரி கொள்முதல்

Share

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பு அடுத்த மாதம் 20 ஆம் திகதி தீர்ந்துவிடும் என்பதால், முறையான ரெண்டர் நடைமுறைக்கு புறம்பாக உடனடி கொள்முதல் மூலம் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் தேவைப்படும் 95 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வழங்க முடியாது எனவும், அதற்காக ஒரு டொலரைக் கூட வழங்க முடியாது எனவும் மத்திய வங்கி தெரிவித்தது. அதற்கமைவாக மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கட்டம் கட்டமாக கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடனடி கொள்முதலின் கீழ் நிலக்கரியை இறக்குமதி செய்யத் தயாராக உள்ள நான்கு நிறுவனங்கள் தொடர்பான கோப்புகள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

#srilankanews

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...