ranil mp
அரசியல்இலங்கைசெய்திகள்

அத்துகோரள கொலை! – சாணக்கியன் ஏற்கின்றாரா?

Share

“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்ட சம்பவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனுமதிக்கின்றாரா?”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியதுடன், சாணக்கியனின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்.

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்ததாலேயே, அரசியல்வாதிகளின் வீடுகள் எரியூட்டப்பட்டன.” என்று மே 20 ஆம் திகதி சாணக்கியன் உரையாற்றியுள்ளார்.

வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் அவர் உரையாற்றிய விதம், ஏற்புடையது அல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அடுத்த நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்குள், சாணக்கியன் தமது கருத்து தொடர்பில் கவலை வெளியிட்டு, தமது கருத்தை மீளப்பெற வேண்டும். இல்லையேல், அது தொடர்பில் சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்.” எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...