Screenshot 2025 12 02 at 16.09.23.webp
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளித் தாக்கம்: 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிப்பு – விசேட பாதுகாப்புத் திட்டம் தயார்!

Share

சமீபத்தில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் விளைவாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, சூறாவளி அனர்த்தத்தினால் இதுவரை 103 சிறுவர்கள் தாராதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது ஒரு பெற்றோரை இழந்ததுடன், இன்னும் சிலர் இருவரையும் இழந்து அநாதரவாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இந்தச் சிறுவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதியின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது:

பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்குப் பல தரப்பினர் தாமாக முன்வந்துள்ளனர்.

எவரும் சுயமாகச் சிறுவர்களைப் பொறுப்பேற்க முடியாது. தத்தெடுக்கும் நடைமுறைகள் அனைத்தும் முறையான சட்ட விதிகளுக்கு அமைய, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் மகளிர் விவகார அமைச்சு இணைந்து இச்சிறுவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தைப் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளன.

சிறுவர்களின் உளவியல் ரீதியான பாதிப்புகளைக் குறைக்கவும், அவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வரவும் விசேட ஆலோசகர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...