WhatsApp Image 2021 12 16 at 4.50.42 PM
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டணி அமைக்க சாத்தியமே இல்லை! – அநுரகுமார திட்டவட்டம்

Share

” பிரதான கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஆட்சியைப்பிடித்து பதவிகளை பங்கிடுவதற்காகவே கடந்த காலங்களில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது சம்பிரதாய நடவடிக்கையாகவும் மாறியுள்ளது. இந்த கூட்டணி கோட்பாடு எமக்கு பொருந்தாது.

தேசிய மக்கள் சக்தியும் கூட்டமைப்புதான். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அங்கம் எமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். எமது கூட்டணிக்கான ஆதரவு பெருகிவருகின்றது.

எனவே, பிரதான கட்சிகள் எனக்கூறிக்கொள்ளும் இரண்டு தரப்புகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாம் கூட்டணி அமைக்கமாட்டோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...