chennai 2
செய்திகள்இந்தியா

கல்லூரிகளுக்கு விடுமுறையளித்த கனமழை

Share

இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழக மாநிலத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், தேனி மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதுரை, இராமநாதபுரம், திருவாரூரில் பாடசாலைகளுக்கு மாத்திரம் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று மதியமளவிலேயே, பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...