elac
செய்திகள்இலங்கை

மாகாண சபைத் தேர்தல் – உறுதியற்ற நிலைப்பாட்டில் அரசு!

Share

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இன்னும் இறுதியான – உறுதியான முடிவொன்றை எடுக்கவில்லை என்பது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் புலனாகின்றது.

2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் வெளியான கையோடு, இலங்கை அரசியல் களத்தில் தேர்தல் தொடர்பான கருத்தாடல்களும் வலுப்பெற்றன.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை பழைய முறைப்படியே (விகிதாசார) நடத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச , நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூட்டத்தில் இணக்கம் வெளியிட்டார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்த பிறகே, தேர்தல் தொடர்பில் அரசியல் களத்திலும், ஊடக பரப்பிலும் அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

ஆனால் 2022 மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என மேலும் சில அமைச்சர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் தேர்தல் முறைமை மாற்றப்படும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் வழங்கியுள்ளார். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்றாலும், எந்தக் காலப்பகுதியில் அது நடைபெறும் என்பது தொடர்பில் உறுதியான பதில் அரச தரப்பிடம் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...