gamini lokuge
செய்திகள்அரசியல்இலங்கை

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எரிபொருள்! – பேச்சுவார்த்தை இன்று

Share

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

எவ்வாறெனினும் நாளை 18ஆம் திகதிவரை வரை நாட்டில் மின் துண்டிப்பு இடம்பெறாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் தொன் எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மின் துண்டிப்பு மேற்கொள்வதற்கான அவசியம் ஏற்படாது என நினைக்கின்றேன்.

எமக்கு 3,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்காக கிடைத்துள்ளது. அதற்கிணங்க நாளை 18ஆம் திகதி வரை மின் துண்டிப்பு இல்லாமல் தொடர்ச்சியாக எம்மால் நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். இன்றைய தினம் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

இதன்போது எதிர்வரும் 25ஆம் திகதி வரைக்குமான எரிபொருளை பெற்றுத்தருமாறு நாம்பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் வேண்டுகோள் விடுப்போம்.ஒரு வருடத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின் அளவு தொடர்பில் நாம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளோம். அதற்கிணங்க இன்றைய தினம் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...