CEB
செய்திகள்இலங்கை

மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள்! – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்

Share

பாரிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப டீசல் மற்றும் எரிபொருளின் அளவு மின்சார சபைக்கு விடுவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய தேவையிருப்பதால், அசெளகரியங்களுக்கு மத்தியிலும் இந்த அளவு எரிபொருள் சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து மின்சார சபைக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் பெறுவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெற்று இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார சபைக்கான மின்சார விநியோகத்தை எவ்வித வெட்டுக்கள் இன்றியும் பேண முடியும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறானதொரு நிலை இருப்பின் தமக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாளை (25) முதல் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒன்றரை மணிநேரமும் மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலைமையை தடுக்கும் வகையில் மின்சார முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...