jaileee scaled
செய்திகள்இலங்கை

கைதிகளைப் பார்வையிட அனுமதி!

Share

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிட முடியும் என றைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 07ம் திகதியில் இருந்து சிறைச்சாலை கைதிகள் உறவினர்களை சந்திப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமையால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உறவினர்களுக்கு அனுமதி வழங்கவும், முடிந்தவரை E-visit முறை மூலம் பார்வையிட வசதிகளை ஏற்படுத்துமாறும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...