AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

கடுமையான வெப்பநிலை! – மின் உற்பத்திக்கு பாதிப்பு?

Share

கடும் வெப்பமான காலநிலை தற்போது நிலவுவதால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுமென எதிர்பார்க்கப்படுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனவரி 30 நாட்களில், நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 180 மில்லியன் கனமீற்றர் நீர் வெளியிடப்பட்டு அதன்மூலம் 85 மணித்தியால வோட்ஸ் அளவிலான மின்னுற்பத்தியை மேற்கொண்டு தேசிய வலைப்பின்னலில் சேர்க்கப்படும்.

சாதாரணமாக தேசிய மின்கட்டமைப்பிற்கு சுமார் 85 ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, 26 கிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தினசரி 2.5 முதல் 3.00 கிகாவாட் மணிநேரம் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது – என அவர் தெரிவித்தார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆகவும் கூடுதலான கொள்ளளவு கடல் மட்டத்தில் இருந்து 438 மீற்றர்களாகும். கடந்த 28ஆம் திகதி, இது 423 மீற்றர்களாக இருந்தது.

நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்கொள்ளளவு 723 கன மீற்றர்களாகும். இது கடந்த 28ஆம் திகதி 421.7 மீற்றர்களாகவிருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...