litrp
செய்திகள்இலங்கை

மூன்று நாட்களுக்கு போதுமான எரிவாயு கையிருப்பில்!

Share

துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களுக்கான டொலரை மத்தியவங்கி விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த எரிவாயு இன்று காலை முதல் இறக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் பின்னர் சிலிண்டர்களில் நிரப்பும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த எரிவாயு மூன்று நாட்களுக்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு வார காலமாக எரிவாயுவுடன் குறித்த கப்பல் நங்கூரமிட்டிருந்த நிலையில், நேற்றையதினம் இதற்கான டொலர் மத்தியவங்கியால் செலுத்தப்பட்டது.

இதேவேளை, எரிவாயு நிரப்பிய இன்னும் இரண்டு கப்பல்கள் ஆழ்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான டொலர் இந்த வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...