Susil
செய்திகள்அரசியல்இலங்கை

விமர்சனத்தின் எதிரொலி! – அநாதையாக்கப்பட்டுள்ள சுசில்

Share

அரசை கடுமையாக விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தற்போது அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ளார்.

அவரை பதவி விலக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்தபோது, சுசில் பிரேமஜயந்தவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியிலுள்ள சில பங்காளிக்கட்சிகள் சுசில் பக்கம் நின்றன. இதனால் தெற்கு அரசியலில் சுசில் புதிய புரட்சி செய்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது சுசிலுக்கு ஆதரவாக எவரும் கதைப்பதில்லை. நிகழ்வுகளுக்குகூட அவரை அழைப்பதில்லையாம். இதனால் அவர் மனம் நொந்துபோய் உள்ளார். தினமும் உயர்நீதிமன்றம் செல்லும் அவர், சில முக்கியமான வழக்குகளை தற்போது கையாண்டுவருகின்றார்.

ஆனால் இது சுசிலின் தந்திரோபாய பின்வாங்கல் என்றும், தருணம்வரும்போது, அவர் அதிரடி காட்டுவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...