del
செய்திகள்இலங்கை

கிழக்கை மிரட்டும் டெல்டா – கல்முனையில் 95 வீதம் தொற்று!!

Share

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகளில் 95 வீதம் டெல்டா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டன.

அங்கு பரிசோதனை செய்யப்பட்ட  18 மாதிரிகளில் 17 கொரோனா டெல்டா வைரஸ் தொற்றும் ஒரு கொரோனா அல்பா வைரஸ் தொற்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதும் மிகவும் அச்சறுத்தலானதுமாகும்.

எனவே மக்கள் நிலைமையைக்  கருத்தில்கொண்டு மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும், தடுப்பூசிகளை தவறாது பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...