baby77
செய்திகள்இலங்கை

கொரோனா பாதித்த குழந்தைக்கு காது குத்து விழா! – திருமலையில் நெகிழ்ச்சி சம்பவம்

Share

பிறந்த 6 நாள்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட கொரோனா பாதித்த குழந்தை ஒன்றுக்கு விடுதியில் உள்ள தாதியர்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.

baby

baby88

baby 77

 

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருகோணமலை கொரோனா சிகிச்சை விடுதியில் நடைபெற்றுள்ளது.

தாதியர்கள் இந்த செயற்பாடு தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவலாகி வருகின்றது.

திருகோணமலையில் சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டுவந்த இந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதியானது.

இதனால் கடந்த 9 நாள்களாக கந்தளாய் கொரோனா சிகிச்சை விடுதியில் குழந்தை  சிகிச்சை பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று 13ஆம் திகதி அக் குழந்தைக்கு பிறந்து 11 மாதம் என மருத்துவமனை அனுமதி அட்டையில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் எடுத்த தாதியர்கள் 8 பேர் ஒன்றிணைந்து கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு காது குத்தும் விழாவை மிகவும் குதூகலமாக கொண்டாடியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...