maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடு தேவையில்லை! – மைத்திரி கொந்தளிப்பு

Share

” சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடாக ஒரு சதம்கூட செலுத்தக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” சீன நிறுவனத்திடமிருந்து உரம் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக அது தொடர்பில் ஆராயப்பட்டிருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது நிபுணர்கள் எவரேனும் சீனா சென்று விடயங்களை ஆராய்ந்த பின்னரே உரத்தை நாட்டிற்கு கொண்டுவர தீர்மானித்திருப்பார்கள்.

எனவே, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பணத்தை அறிவிட வேண்டும். மக்கள் பணத்தில் இருந்து ஒரு சதம்கூட செலுத்தப்படக்கூடாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...