3e687ce8 35e823a1 chinasl
செய்திகள்இலங்கை

வடக்கில் மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா!

Share

சீனா வடக்கிலுள்ள தீவுகளில் முன்னெடுக்க இருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது. வடக்கில் நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் இச்செயற்றிட்டத்தை ஆரம்பிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sino Soar Hybrid Technology என்ற சீன நிறுவனம் பாதுகாப்பு தொடர்பாக மூன்றாம் தரப்பு முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்டே இச்செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இலங்கையில் மின்னுற்பத்தி திட்டத்தை கைவிட்ட சீன நிறுவனம் கடந்த 29 ஆம் திகதி மாலைத்தீவிலுள்ள 12 தீவுகளில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இச்செயற்றிட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, இச்செயற்றிட்டம் தொடர்பாக விழிப்புடன் இருப்பதாக இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...