Ministry of Health
செய்திகள்இலங்கை

மதுபானசாலை திறப்பு! – சுகாதார அமைச்சு அறிவித்தல் வழங்கவில்லை

Share

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை.

இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுபான சாலைகள் திறக்கப்பட்டமை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு பொருத்தமான செயற்பாடல்ல. சுகாதார அமைச்சால் இது குறித்து எந்தவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.

மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

ஆகவே உரிய அதிகாரிகள் இது குறித்து அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீண்டுமொரு முறை நாட்டை கொரோனா பரவலுக்கு உள்ளாக்க வாய்ப்பளிக்கக்கூடாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...