pasalai
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை வந்தடைந்தது ஒரு தொகுதி பசளை

Share

இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதல் தொகுதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 12.25 மணிக்கு இந்த பசளைத் தொகுதி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL – 1156 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தது.

இந்தத் திரவப் பசளை, அம்பாறை, மட்டக்களப், திருகோணமலை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு, மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து, இலங்கையால் 31 லட்சம் லீற்றர் திரவ நைட்ரஜன் பசளை கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 5 லட்சம் லீற்றர் பசளை, இந்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளது.

குறித்த பசளையானது, உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற உயர் ரக பசளையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...