Pre
செய்திகள்அரசியல்இலங்கை

சீருடையின்றி பாடசாலைக்கு வர அனுமதி!

Share

தமக்கு ஏற்ற ஆடைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேற்படி தெரிவித்துள்ளார்.

கொரோனாப் பரவல் காரணமாக நீண்ட காலம் அமுல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்துக்குப் பின்னர், தற்போது பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடை ஆகியவற்றை வாங்க முடியாத மாணவர்களின் நன்மை கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை முதல், 200க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...

Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...