corona update
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் மேலும் 30 பேருக்கு தொற்று உறுதி!

Share

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் உட்பட வடக்கில் மேலும் 30 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 206 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இவ்வாறு 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக,

* வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேருக்கும்,
* யாழ். போதனா வைத்தியசாலையில் 03 பேருக்கும் (உயிரிழந்த முதியவர் உட்பட),
* பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
* சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
* முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
* முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவருக்கும்,
* மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
* கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும்

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
விகாரை
இலங்கை

விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட வீதி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக...

anura kumara
இலங்கை

அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பாக ஜனாதிபதியின் அறிவுறுத்தல்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “2023ஆம் ஆண்டின் ஊழல்...

anura signature
இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் கையெழுத்திட்டால் மரண தண்டனையை நிறைவேற்றலாம்!

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்அவர்களுக்கு எதிராக...

AL Exam Bad Weather Grade 05 Scholarship examination
இலங்கை

பரீட்சை காலத்து இடர்களை அறிவிப்பதற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள தொலைபேசி இலக்கங்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக்...