செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோலா?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளியில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளியில் வருவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையிலேயே நாளை பரோலில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதற்காக மதுரையில் இருந்து தரை வழிப் பயணமாக கன்னியாகுமாரி சென்றிருந்தார்.
ஆகவே பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி ரவிச்சந்திரன் நாளை பரோலில் விடுவிக்கப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: சாந்தனை அழைத்து வர நடவடிக்கை: ஜனாதிபதி உறுதி - tamilnaadi.com